Monday, 29 December 2014

அனைவருக்கும்  என்  பணிவான  வணக்கங்கள் !
2014ல் நம் செய்தித்தாள்களில் நாம் அறிந்த விடயங்கள் நிகழ்வுகளை  நாம் நினைவு கூர்ந்தால் நம் வருங்கால சந்ததியர் சரியான பாதையில் போவதாக உணர்கிறோமா? நம் பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்கிறதா? 2014 குற்றவாளிகளில் எத்தனை பேர் படித்தவர்கள்? மகிழ்ச்சி தரக்கூடியது என்பதற்காக கூட்டமாக சேர்ந்து செய்வது எல்லாம் சரியாகி விடுமா? சரியனது என நாமாகவே முடிவு செய்யலாமா ?
வலைதளங்களில் நம்மவரின் பண்பாட்டை வளர்த்தெடுக்க நாம் ஏன்  முயலக்கூடாது? நம் பாரம்பரிய வழக்கங்களை நாம் ஏன் பிறர் அறிய பகிர்தல் கூடாது ? இன்றைய இளைஞர்கள் நமது பண்பாட்டு விடயங்களை அறியவிடாது தடுப்பது வலைதளங்களும் சினிமாவும்தான் என்பதை யார் உணரவல்லோம்? யாராவது இதை எல்லாம் சரி செய்ய வர மாட்டார்களா என எத்தனை பேருக்கு தோன்றுகிறது? அவர்கள் இந்த தளத்தில் தங்கள் கருத்துக்களை பகிருங்கள்

No comments:

Post a Comment